யாதும் ஊரே, யாவரும் கேளிர்

08/06/2013 02:55

யாதும் ஊரே, யாவரும் கேளிர்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன,
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே, மின்னொடு
வானம் தன்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப்படு உம் புணைப்போல் ஆர் உயிர்
முறைவழிப் படு உம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியிற்
பெரியாரை வியத்தலும் இலமே,
சிறியாரை இகழ்தல் அதனிலும் இலமே.

Back

Search site

© 2013 All rights reserved.